Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

எந்நாளும் போற்றும் தென்னாட்டு மறவர்கள்-5

21 Jul 2020 8:18 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

வே.சதானந்தன் எழுதும்
மறக்கப்பட்ட வீர வரலாற்றுத் தொடர் – 5
வீரமங்கை வேலு நாச்சியார்

ராமநாதபுரத்தின் இளவரசி,  மகாபாரதம், ராமயணம், இலக்கியங்களை சிறு வயதிலேயே கற்றுத்தேர்ந்தவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, அரபி, பிரஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் என பத்து மொழிகள் பேசக்கற்றவர், சிறு வயதிலேயே போர்கலைகளிலும். வாள் சண்டை, வில்வித்தை, யானையேற்றம், குதிரையேற்றம், வளைதடி ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர், போர்வாளை தன் கைகளால் இரண்டாக உடைக்கும் வலிமைப் பெற்றவர். ஆறடி உயரத்தில் பேரெழில் கொஞ்சும் அழகிய மங்கை, வீரத்திலோ வீர வேங்கை. அழகும் வீரமும் ஒருங்கே இணைந்த அணங்கின்பால்  எவர்தான் காதல் கொள்ளார்.

ஆம் அந்த ஆரணங்கு தான் வீரமங்கை வேலு நாச்சியார்,  காதல் வயப்பட்டு அவரை மணந்தவரோ  சிவகங்கை இளவரசர் கவுரிபவல்லப உடையன முத்துவடுகநாதர்

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்ததோ 1730ல் சேதுபாலம் ராமலிங்கத்தின் பாதுகாவலர்களான சேதுபதி வம்சத்தில். தந்தை இராமநாதபுர மன்னர் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார் அவார் . வேலுநாச்சியார் பிறந்ததோ ‘சக்கந்தி’ என்ற இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர்.

1746ம் வருடம். வேலுநாச்சியார் முத்து வடுகநாதருடன் சிவகங்கைக்கு குடிபுகுந்தார். சிவகங்கையை ஆக்ரமிக்க நினைத்து போர் தொடுத்த நவாப் கிழக்கிந்தியபடையினர் விரட்டியடிக்கப்பட்டனர் அதனால் நவாப் கிழக்கிந்தியபடையினர் வஞ்சத்தால் கொல்ல நினைத்து கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற இளவரசியையும் கொல்ல படையை அனுப்பினர். மன்னர் வளரிவீச்சீல் பல எதிகளை கொன்றார். நவாப் படையினர் மன்னரின் குதிரைக்கால்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும், கண்டந்துண்டமாக வெட்டி மன்னரையும் இளவரசியையும் படுகொலை செய்தனர்.

இதற்கு தலைமை தாங்கியவன் தளபதி பான்ஜோர்,ஜோசப ஸ்மித். சிவகங்கையை கைப்பற்றி உசேன்பூர் என்று பெயர் மாற்றம் செய்தனர்.மன்னர் இறந்த செய்தி எட்டி வேலு நாச்சியார் கதறினார். கணவரின் உடலைப் பார்க்க துடித்தார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய நவாப் படை ஒன்றை அனுப்பினான் வேலு நாச்சியார் எதிரிப்படைகளை துவம்சம் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென துடித்தார்.கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். வேலு நாச்சியார். காளையர் கோயிலில் எங்கெங்கும் பிணக் குவியல். இறந்த அரசரும் இளையராணியும் காண, தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட முடிவு செய்தார்.

ஆனால் அமைச்சர் தாண்டவராய பிள்ளை மற்றும் தளபதி களாயிருந்த மருது சகோதரர்கள் மனதை மாற்றி நாட்டை எதிரியிடமிருந்து மீட்டு உங்கள் கைகளால் பழி வாங்கவேண்டும் என எடுத்துரைத்தனர். அரசியையும் வெள்ளச்சி நாச்சியாரையும் திண்டுக்கல் கோபால நாயக்கர் கோட்டைக்கு மருது சகோதரர்களின் பாதுகாப்போடு கொண்டு சென்றனர் 

விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால நாயக்கர்,விருப்பாட்சியில் பாதுகாப்பாக தங்க வைத்தார்.ஆண் வேடத்தில் ஐதர் அலியை சந்தித்து படையுதவி கேட்டார் அவரும் 5000 குதிரைவீரர்களையும் 5000 காலாட் வீரர்களையும், பீரங்கிப்படைஒன்றையும் உடன் அனுப்பி வைத்தார்.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.,

ஆடுமேய்க்கும் உடையாள் என்ற பெண்ணிடம் வேலு நாச்சியார் பற்றிய தகவலை ஆங்கிலேயர் படையினர் கேட்க அவர் மறுத்துவிட்டதால், ஆங்கில்லேய படையினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். தன்னை காட்டி கொடுக்காததால் கொல்லப்பட்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு,தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார். (இன்றும் அவர் வெட்டுண்ட காளியம்மனாக வணங்கப்படுகிறார்.)

விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். அதனை பயன்படுத்தி வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை.

சிவகங்கை சீமையின் படைகளோடு மருதுபாண்டியரின் மக்கள் படையும் சேர்ந்து கம்பனிபடையை நாசம் செய்தது. மருதுபாண்டியரின் கொரில்லா போர் முறை உக்கிரம் தாளது அந்திய படை தோற்று ஓடியது. ராணியார் பெண் படையுடன் மகாஉக்கிரம் காட்டினார்.  சுதாரித்த ஆங்கிலேய சிப்பாய்களோ ஆயுத கிடங்கில் பூஜையில் இருந்த ஆயுதங்களை எடுத்து தாக்கப் புறப்பட்டனர் இதனால் இராணியின் வெற்றிக்கான வாய்ப்பு குறைந்து போகும் என்ற விபரீத்தை உணர்ந்த  தேசப்பற்று மிக்க குயிலி (எந்நாளும் போற்றும் தென்னாட்டு மறவர்கள்-3 வாசிக்கவும்) உடலில் தீ மூட்டி வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் புகுந்து சர்வநாசம் செய்து இறந்தார்.

தனது ஐம்பதாவது வயதில், தனதுகணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். கடைசியில் எதிரிப்படை வீழ்ந்தது ராணி பான்ஜோர் கழுத்தில் கத்தி வைக்க பான்ஜோரும் ஸ்மித்தும் மண்டியிட்டு ராணியிடம் உயிர் பிச்சை அளிக்குமாறு வேண்டினர்.மண்டியிட்டவருக்கு மரணம் விளைவிப்பது தர்மம் அல்ல எனவே மன்னிப்பு அளித்தார். ராணிக்கு மன்னிப்பு பட்டயம் எழுதி கொடுத்தனர்.

சிவகங்கையின் ராணியாய் மீண்டும் பதவி ஏற்றார்.சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. 1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ்நாட்டுக்குச் சென்றார். மருது சகோதரர்களை மகன்களாக எண்ணி நாட்டின் ஆளுநர்களாக நியமித்தார் 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால்,விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796ல் மறைந்தார்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 5
Total views : 410192
Who's Online : 0
Your IP Address : 18.224.0.25

Archives (முந்தைய செய்திகள்)