03 Jun 2024 10:43 pmFeatured

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் தலைவரும் தமிழினக் காவலரும் நூற்றாண்டு கண்ட தலைவரும் முத்தமிழறிஞருமான கலைஞர் அவர்களது பிறந்தநாள் இன்று (03-06-2024)
மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மும்பை பாண்டூப்பில் உள்ள பிரைட் மேனிலைப்பள்ளியில் உள்ள தேவதாசனார் அரங்கத்தில் வைத்து பொருளாளர் பி கிருஷ்னன் தலைமையில் மாலை 6 மணியளவில் கொண்டாடப்பட்டது.
புறநகர மாநில செயலாளர் அலிசேக் மீரான் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து சிறப்புரையும் ஆற்றினார்.

துணைச் செயலாளர் அ.இளங்கோ, தி.க தலைவர் பெ.கணேசன திமுக தலைமைக்கழக பேச்சாளர் முகமதுஅலி ஜின்னா இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.அ. ஜைனுல்லாபுதீன், இலக்கிய அணிப் புரவலர் எஸ்.பி.குமரேசன்,பம்பாய் திருவள்ளுவர் மன்ற செயலாளர் ஐரோலி செல்வராஜ் டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை சோ.பாபு , பாண்டூப் தமிழ்சங்க தலைவர் ச சி தாசன், மும்பை நாடார் சங்க செயலாளர் பேலஸ்துரை, பாண்டூப் திமுக நிர்வாகிகள் குமாரசெல்வன், மாரி , குரு, பெருமாள், முலுண்ட் பாலசுப்பிரமணியன், லத்தீப்பாய், பிவண்டி கிளைகழக நிர்வாகிகள் முஸ்தாக்அலி, ஹூசேன் பாய் ,மலாட் தமிழர் நலச்சங்க தலைவர் பாஸ்கரன், திமுக உறுப்பினர்கள் ஜெயக்குமார் ஜெபர்சன், பாண்டியன் இம்ரான், அழகுராஜ், முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தலைவர் கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.






Users Today : 30
Total Users : 120159
Views Today : 44
Total views : 451587
Who's Online : 1
Your IP Address : 216.73.216.173