24 Nov 2022 10:52 amFeatured

மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக தொழிற் புரட்சி நாயகன், மேனாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 19 ஆவது நினைவு நாள் பாண்டுப், தேவதாசனார் அரங்கத்தில் வைத்து 23.11.2022 மாலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் வதிலை பிரதாபன், அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் வ.ரா.தமிழ்நேசன், இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார்,
இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன், கழக பேச்சாளர் முகமதலி ஜின்னா, கிளைக் கழகச் செயலாளர்கள் வீரை.சோ.பாபு, மெகபூப் பாட்சா,
மற்றும் கழகத் தோழர்கள் எஸ்.தாசன், ஜான் கென்னடி, பேலஸ் துரை, ஜெயராஜ் மேலும் பலர் கலந்து கொண்டு முரசொலி மாறன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.






Users Today : 8
Total Users : 111120
Views Today : 8
Total views : 439503
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138
Thanks for the news.