Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

முப்பெரும் விழா – மும்பை புறநகர் மாநில திமுக ஜோகேஷ்வரி கிளை சார்பில்

14 Oct 2022 12:53 amFeatured Posted by: Sadanandan

You already voted!

முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வருகிற 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகம் ஜோகேஸ்வரி கிளை சார்பில் முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜேகேஸ்வரி கிழக்கில் உள்ள பம்பாய் தமிழர் பேரவையின் பீப்புள்ஸ் வெல்பேர் ஆங்கிலப் பள்ளி வளாகம் எல்.பிளாக் ப்ரேம் நகர் பகுதியில் வைத்து பம்பாய் தமிழ்ப்பேரவை கல்விக்குழுப் பொருளாளர் சையது அலி தலைமையில் நடைபெறுகிறது.

மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரை ஆற்றவுள்ள நிகழ்வில் இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் வரவேற்புரை ஆற்றுகிறார்.

பம்பாய் தமிழ்ப்பேரவை கல்விக்குழுவைச் சார்ந்த எ.தங்கராஜ், தந்தை பெரியார் திருவுருவப் படத்தையும் மும்பை புறநகர் மாநில தி.மு.கழக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் பேரறிஞர் அண்ணா படத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை பீவண்டி கிளைக்கழகச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா சேக் என மூவரும் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள்.

ஜோகேஸ்வரி பகுதிவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மும்பை மாநில திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் கரூவூர் பழனிச்சாமி மும்பை புறநகர் மாநில தி மு கழக துணைச் செயலாளர் அ.இளங்கோ மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந வசந்தகுமார் ஆகியோரும் வழங்கவுள்ளார்கள்.

புறநகர் மாநிலத் தி.மு கழக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் நிகழ்வினை தொகுத்து வழங்குகிறார். பம்பாய் தமிழ்ப்பேரவை கல்விக்குழுமேனாள் துணைச் செயலாளர் டிம்லேசன் நன்றியுரை ஆற்றுகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் புறநகர் திமுக இலக்கியணித் தலைவர் வே.சதானந்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், பம்பாய் தமிழ்ப் பேரவை கல்விக்கழு செயலாளர் ஆர்.ரமேஷ், கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் நெல்லை பைந்தமிழ், இலக்கிய அணிப் புரவலர் இரஜகை நிலவன், துணை அமைப்பாளர் ஜைநுல்லாப்தீன், முத்தமிழ் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

புறநகர் தி.மு கழகப் பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை திமு கழக அவைத்தலைவர் வே.ம.உத்தமன், இலக்கியணிப் புரவலர் சோ.பா.குமரேசன், இரா.கணேசன், கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளான வீரை சோ.பாபு, மாரியப்பன், முகமது அலி, ப.ஜீவானந்தம், ஜஸ்டின், மா. மகேசன், பாலமுருகன், எஸ்.பெருமாள், முஸ்தாக் அலி ஆரே காலணி தர்மலிங்கம், ராஜேந்திரன் வே, .சிவா, ஆர்.லோகநாதன், கே.சுந்தர், யூசுப், அகிசானுல்லா, ஷேர் அலி, சந்திரசேகர் ராஜு, கே.முருகேசன், முகமது செரீப், சையத் அமானுல்லா, என் ராஜேஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092557
Users Today : 3
Total Users : 92557
Views Today : 4
Total views : 410260
Who's Online : 0
Your IP Address : 3.17.110.58

Archives (முந்தைய செய்திகள்)