23 Mar 2020 8:29 pmFeatured

அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
தடையை மீறி வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் பொதுவெளியில் நடமாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் பொதுவெளியில் நடமாடினால் அவர்களின் பாஸ்போட்டை முடக்கி, விசாவை ரத்து செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்/ வெளிநாட்டவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது.
முன்னதாக தமிழக முதல்வர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதல்வர், கொரோனா அறிகுறியுடன் இருப்பதை அரசுக்கு தெரியப்படுத்தா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இப்படியான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது






Users Today : 10
Total Users : 115708
Views Today : 10
Total views : 445544
Who's Online : 0
Your IP Address : 216.73.217.11