08 Aug 2019 8:47 amFeatured

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு மும்பை புறநகர் திமுகவின் கிளை கழகங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிவாண்டி கிளை
பிவாண்டி கிளை கழகத்தின் சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
பிவண்டி தாமன்கர் நாக்காவில் உள்ள திமுக கிளை அலுவலகத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் திமுக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார்,
மும்பை புறநகர் திமுக வின் இலக்கிய அணித் தலைவர்
வே.சதானந்தன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன்,
பிவாண்டிகிளை அவைத் தலைவர் முகம்மது அலி, பொருளாளர் முஸ்தாக் அலி , பிவண்டி கிளை இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சம்பத், பிவண்டி கிளை கழகத்தை சார்ந்த அசன் அலி, இரா.தியாகராஜன், கல்வா கிளை வினோத் மற்றும் கிளை கழகத்தினர் பலரும் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



ஜோகேஸ்வரி கிளை

ஜோகேஸ்வரி கிளை சார்பில் மும்பை தமிழர் பேரவை கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் தங்கராஜ், பொருளாளர் லோகநாதன், கிளை நிர்வாகிகள் தமிழினநேசன், நூர்முகமது,சையத் அலி, சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்
ஜெரிமெரி கிளை

மும்பை புறநகர் மாநில திமுக ஜெரிமெரி கிளை சார்பாக முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் மும்பை புறநகர திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ
இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ் நேசன்,
கிளைக் கழகச் செயலாளர் எஸ். முருகன், கிளைக் கழகத்தைச் சார்ந்த திலக்ராஜ், முத்துக்குமார், ஏ.சி.காதர், விக்கி பெருமாள், ரோஷன் பால்ராஜ்,ஆல்வின் மாணிக்க ராஜ், மஞ்சுநாத்,
அஜய் குமார், அஸ்வினிக்குமார், சரோஜாதுரை,சுருவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






Users Today : 9
Total Users : 113253
Views Today : 16
Total views : 442456
Who's Online : 1
Your IP Address : 216.73.216.219