10 Aug 2020 6:00 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "இல்லாமல் இருக்கிறார் கலைஞர்" எனும் தலைப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் எண்பதாண்டு கால பொது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, திரைத்துறையில் செய்த மறுமலர்ச்சி, ஆட்சியாளராக கலைஞர் செய்த சாதனை என தமிழக அரசின் மேனாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி சொல் வேந்தர் கம்பம் செல்வேந்திரன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ் நேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் மும்பை நகர தி.மு.க. பொறுப்பாளர் கரூர். இரா. பழனிச்சாமி, மும்பை புறநகர் மாநில தி.மு.க பொருளாளர்
பி. கிருஷ்ணன், துணைச் செயலாளர் அ.இளங்கோ, இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், இலக்கிய அணி தலைவர் வே.சதானந்தன், பொருளாளர் ப. உதயகுமார், துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், பாவலர் நெல்லைப் பைந்தமிழ், சுப்பிரமணியன்,
திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர், தலைமைக் கழகப் பேச்சாளர் ஒப்பிலா மணி, பன்னாட்டு தமிழுறவு மன்றத் தலைவர் வா.மு.சே.திருவள்ளுவர், இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனர் எம்.கருண்,குமரி மாவட்ட திராவிடர் கழகத்
தலைவர் தயாளன்,மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன்,
பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரவிச்சந்திரன், மும்பை புறநகர் தி.மு.க கிளைக் கழக நிர்வாகிகள் வீரை.சோ.பாபு, மெஹபூப் பாட்சா, ஆ.பாலமுருகன், கு.மாரியப்பன், எஸ்.பெருமாள், எஸ்.பழனி, முஸ்தாக் அலி, முகமது அலி, ஆழ்வார்,மேலும் அந்தோணி ஜேம்ஸ் , அருணாசலம், வி.குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37