08 Dec 2020 7:33 pmFeatured
-இரும்பொறை
இரங்கற்பாவே
நினைத்திருக்கவில்லை
உமக்கு
இரங்கற்பாவெழுத
நேரிடுமென்று!
விண்மீன்களை
இணைக்கும்
வித்தை
அறிந்திருந்தாயோ
தமிழர்களையே
இணைக்கும்
நாராய்
திகழ்ந்தாய்
நீ!
நீ
விதைத்தவிதைகள்
செடிகளாய்
மரமாய்
விருட்ச்சமாய்
அதில்
இளைப்பாற
நீ மட்டும்
இன்றில்லை!
நின்
நினைவுகள்
செயல்கள்
நிழல்களாய்
நிலைத்திருக்கும்
நிரந்தரமாக!
வாழ்வாங்கு
வாழ்ந்தவர்களில்
வைய்யத்துள்
நீயும்
ஒருவன்!!