Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா- பொதுமக்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்

26 Jul 2020 6:11 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தின் 438 வது திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் தூயபனிமய மாதா திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயம் எதிரில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாமெனவும் வீடுகளில் இருந்தே பிரார்த்தனை செய்யும்படியும் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கேட்டு கொண்டதன்பேரில் கொடியேற்றம் பொதுமக்கள் பங்கேற்பில்லாமல் நடைபெற்றது. தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய திருவிழா இன்று துவங்கி வரும் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலயத்தில் உள்ள பனிமயமாதா விற்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு பொன்மகுடம் பூட்டப்படுகிறது

திருவிழாவில் தினந்தோறும் நடைபெறும் சிறப்பு ஆராதனைகள் திருப்பலிகள் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என ஏற்கனவே மறை மாவட்ட ஆயர் தெரிவித்து உள்ளார் .

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

106473
Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37

Archives (முந்தைய செய்திகள்)