Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை

04 Oct 2019 1:53 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு மனுத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 203 தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21-வது சுற்று வாக்குகளையும் திரும்பவும் எண்ணுமாறு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்கு இயந்திரங்களையும் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் தேர்தல் ஆணையம் இன்று ஒப்படைத்தது. இதையடுத்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பாளர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்நிலையில், ராதாபுரம் தொகுதி தேர்தலுக்கான மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட  தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

117822
Users Today : 66
Total Users : 117822
Views Today : 144
Total views : 448509
Who's Online : 0
Your IP Address : 216.73.217.150

Archives (முந்தைய செய்திகள்)