Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மும்பை புறநகர் மாநில திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது

17 Sep 2020 9:39 amFeatured Posted by: Sadanandan

You already voted!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும்  விழா  15.09.2020 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக பாண்டுப் பிரைட் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 

மும்பை புறநகர் நாநில திமுக செயலாளர் திரு,அலிசேக் மீரான் சிறப்புரையாற்றிய பொழுது
தலைமையுரையாற்றும் திரு.கு,மாரியப்பன்

பாண்டுப் கிளைக் கழகத்தைச்  சார்ந்த ஆசிரியர் குமாரசெல்வம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த தந்தைப் பெரியார் திருவுருப்படத்தை  மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன் அவர்களும், பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்தை மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் அவர்களும், தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவப் படத்தை இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன் அவர்களும் திறந்து வைத்தனர்.

கழக பேச்சாளர் ஜின்னா அவர்கள் உரையாற்றிய பொழுது

மும்பை புறநகர் திமுக இலக்கிய  அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், கழகப் பேச்சாளர் முகமது அலி ஜின்னா, இலக்கிய அணி புரவலர் இரஜகை நிலவன், மால்வாணி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.பி.செழியன், தானே கிளை ஜாகிர் உசேன்,  மும்பை புறநகர் மாநில திமுக டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு , பைய்ந்தர் கிளை ஜாபர் கான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்..         

நலத்திடட உதவி பெற்றோருடன்

முப்பெரும் விழாவில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனர் எம்.கருண், மும்பை மாநகர ‌திமுக அவைத் தலைவர் வே.ம.உத்தமன், பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.தாசன், மும்பை மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜான் சாமுவேல், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் க.மூர்த்தி, மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகச் செயலாளர்கள்  மெகபூப் பாட்சா,, சு.பெருமாள், மகேசன், வே.இராஜேந்திரன் மும்பை மாநகர ஸ்டீபன் ராஜ், பாண்டுப் கிளைக் கழக துணைச் செயலாளர் சேர்மன்துரை, பாண்டுப் கிளைக் கழக பேலஸ்துரை,  கிளைக் கழக நிர்வாகிகள் முகமது அலி, பொய்சர் எம்.சதாசிவம், ஆரே காலனி சிவபெருமாள்,  ஆகியோர் வழங்க;  மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ நன்றியுரை ஆற்றினார்..

கழக மூத்த முன்னோடி ஜாண் சாமுவேல் அவர்களை செயலாளர் அலிசேக் மீரான் சிறப்பித்தபோது

மேலும் இவ்விழாவில் கல்யாண் கிளைக் கழகச் செயலாளர் மகேசன், கிளைக் கழகங்களைச் சார்ந்தகிளைக் கழகங்களைச் சார்ந்த  சீத்தா கேம்ப் கிளை எம்.மூர்த்தி , எம்.இரவி, பாண்டுப் கிளை வள்ளியூர் மணி, எஸ்.சதாசிவம், எஸ்.ஜெயசிங், ஆர்.செபஸ்டீன், ரவிராம் , பீவண்டி கிளை ஷான்பாட்சா, கோவண்டி கிளை இரா.செல்வம்  மற்றும்  கலியமூர்த்தி, எஸ்.இராமர், கே.சுரேஷ், இராதாகிருஷ்ணன், கழகத்தின் முன்னணித்  தோழர்களும் , நலத்திட்ட பயனாளர்களும் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092649
Users Today : 27
Total Users : 92649
Views Today : 33
Total views : 410392
Who's Online : 0
Your IP Address : 3.139.80.15

Archives (முந்தைய செய்திகள்)