Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தென்பாண்டி குறவஞ்சி

09 Apr 2020 5:48 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

கவிஞர் ஜேம்ஸ் அந்தோணி

பனங்கிழங்கொடித்து பானைப்
பதினியிட்டு பதம் பிடித்து உண்போம்
அருவிக்கரை இறால் பிடித்து ஆற்றாங்கரை
சம்பா சமைத்துண்டு மகிழ்வோம்

செங்கழனி ஒடை நண்டு பிடித்து
யானைக்கரையில் சுட்டுண்போம்
குறிஞ்சிகுளம் அல்லி பறித்து
அன்னம்மாளுக்கு மாலை தொடுப்போம்

பொன்னகரச் சந்தியிலே பொழுதிலே
பொங்கலிட்டு மகிழ்வோம்
நெல் வளமும் நெய் வளமும் பொங்கும்
தென் பாண்டிநாடே, நன் பாண்டிநாடே

கடல் பெருகி நதியுடைக்க நீரேறி
மதகு கடந்து மறுகாலேறி கருவிறால்
கால் வாயேறி கதலிப்பழம் சிதறடிக்க
தேன் சிட்டு சிலிர்த்து பறக்க தேன்
கூட்டில் குழல் பதித்து மதுரமுரிய
மல்லிகை மணம் பெருகும் தென்
பாண்டி சீமையே, எம் பாண்டி மண்ணே!

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092540
Users Today : 7
Total Users : 92540
Views Today : 11
Total views : 410211
Who's Online : 0
Your IP Address : 18.222.108.18

Archives (முந்தைய செய்திகள்)