06 Mar 2021 12:46 pmFeatured

இன்று (06-03-2021 சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக மகளிர் நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் உலக மகளிர் நாளாக கொண்டாடப் படுவதையொட்டி வழக்கம்போல் பெண்களின் சிறப்புகளை உலகறியச் செய்யும் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இந்த ஆண்டும் இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் விதமாக இணையம் வழியாக நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில் மகளிர் பெருமை பற்றி ஆண்கள் உரையாற்றும் நல்லதொரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது.
மன்றத்தின் பொதுச் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மன்றப் பட்டிமன்றப் பேச்சாளர் செல்வி ராஜ் வரவேற்புரை ஆற்றுகின்றார்.
மன்றத்தின் கருத்தரங்கப் பேச்சாளர் கவிச்செம்மல் ஆரோக்கிய செல்வி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார். நிறைவாக பட்டிமன்றப் பேச்சாளர் கலைச்செல்வி நன்றியுரை ஆற்றவுள்ளார்.
கருத்தரங்கம்
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தேர்வாணையர் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.முருகேசன் தலைமையில் நடைபெறவுள்ள கருத்தரங்கத்தில்
“தாயின் பெருமை" பற்றி தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் மிக்கேல் அந்தோணி
"மனைவியின் பெருமை" பற்றி மன்றப் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன்
"சகோதரியின் பெருமை" பற்றி மன்றப் பட்டிமன்றப் பேச்சாளர் கே.வேங்கட்ராமன்
"மகளின் பெருமை" பற்றி மன்றக் கவியரங்க நடுவர் கவிஞர் பாபுசசிதரன்
"இலக்கியத்தில் பெண்" என்ற தலைப்பில் மன்றக் கவியரங்க நடுவர் கவிஞர்.நா.ராம்
ஆகிய ஐந்து பேச்சாளர்களும் உரையாற்ற உள்ளார்கள்.
ஆட்சிமன்றக் குழுவைச் சேர்ந்த வே.சதானந்தன் மற்றும் நிர்வாகக்குழு துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்கள்.
மன்ற நிர்வாகிகள் புரவலர்கள் ஆலோசகர்கள் அங்கத்தினர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மகளிர் புகழ் பாடும் இந்த நிகழ்வைப் பெருமைப் படுத்தும்படி அனைத்து நிர்வாகிகளின் சார்பில் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
To Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/87088492619?pwd=Q2FUMG5uRlFKL0NPc2o1TGNrS3BhZz09
Meeting ID: 870 8849 2619
Passcode: 654321






Users Today : 1
Total Users : 108814
Views Today : 1
Total views : 436850
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150