21 Aug 2019 11:18 amFeatured


தென்னரசு திங்களிதழின் நிறுவனரும் ஆசிரியரும், மும்பை புறநகர் மாநில திமுக வின் துணைச்செயலாளரும், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான நினைவில் வாழும் பேராசிரியர் சமீராமீரான் அவர்களின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு பலருக்கு அரசியல், எழுத்தாளர், பேச்சாளர் என அடையாளம் காட்டப்பட்ட அவர் வாழ்ந்த இல்லத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மராத்திய மாநில எழுத்தாளர் மன்றத்தின் இன்றைய தலைவரும், மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளருமான
முனைவர் வதிலை பிரதாபன், அவைத்தலைவர் சுப்பிரமணியன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்த குமார், துணை அமைப்பாளர் இரா.கணேசன், பிவண்டி கிளை பொருளாளர் முஷ்டாக் அலி, தானே கிளைச் செயளாளர் பாலமுருகன், முலுண்ட் கிளைச் செயலாளர் பெருமாள், அப்துல்லத்திப், தமிழரசன் இவர்களோடு இன்றைய தென்னரசு இணையதள ஆசிரியரும், இலக்கிய அணித் தலைவருமான வே.சதானந்தன் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினர், வதிலை பிரதாபன், தமிழ்நேசன், சுப்ரமணியன், வசந்தகுமார் ஆகியோர் பேராசிரியருடனான நிகழ்வுகளை பகிந்துகொண்டனர்.
பேராசிரியரின் மகன் சமீர் ஹசன் முகமதுவும் உடன் இருந்தார்






Users Today : 21
Total Users : 115998
Views Today : 25
Total views : 445900
Who's Online : 0
Your IP Address : 216.73.216.101