06 Aug 2020 1:42 amFeatured

மும்பை புறநகர் பகுதியான அம்பர்நாத் மேற்கு, மத்திய ஆயுத தொழிற்சாலை அருகே சவ்சாய் பகுதியில் குன்றின்மேல் அமைந்துள்ளது ஸ்ரீ குமரகிரி தேவஸ்தானம். இது தமிழர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (05.08.2020) மாலை 6.30 மணியளவில் இக்கோவில் வளாகத்தில் இருந்த வேப்பம் மரம் ஒன்று பலத்த மழை மற்றும் காற்று காரணமாக வேருடன் சரிந்து விழுந்தது. இதில் கோவில் பிரகாரத்தின் மேற் கூரை பலத்த சேதம் அடைந்தது.
கோவில் நிர்வாகத்தின் செயலாளர் அண்ணாதுரை அவர்களின் கூற்றின்படி எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை






Users Today : 28
Total Users : 115726
Views Today : 32
Total views : 445566
Who's Online : 0
Your IP Address : 216.73.216.188