22 Jun 2019 1:32 amFeatured

கோலாலம்பூர் செந்நூல் முத்தமிழ் படிப்பகத்தில் துன் சம்பந்தன் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்.16.06.2019 அன்று மாலை 6.மணிக்கு திருமதி.அ.தனலட்சுமியில் இறைவணக்கம் பாடலுடன் தொடங்கியது. முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.ராமன் தலைமைதாங்கி உரையாற்றினார்.
நேத்தாஜி மன்றத் தலைவர் சுப.நாரயணசாமி துன் சம்மந்தன் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றினார். கவிஞர்.பாதாசன், கவிஞர் மற்றும் எழுத்தாளர் சை.பீர் முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வைரக்கவி ஏ.ஆர்.சுப்பிரமணியம்,கவிஞர் பொன்னுசாமி, கவிஞர் ஜோசப் செபஸ்டியன், கவிஞர் ஆர்.டி.டேவிட் ஆகியோர் துன் சம்பந்தனைப் பற்றி கவிதை வாசித்தனர். நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் படிப்பக தலைவர் பெ.ராமன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். படிப்பக செயலாளர் விலாய மணியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.






Users Today : 59
Total Users : 118349
Views Today : 70
Total views : 449351
Who's Online : 1
Your IP Address : 216.73.216.42