07 Nov 2019 8:32 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் அவைத் தலைவர் வி.தேவதாசன் அவர்கள் உடலுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் பிரைட் உயர்நிலை பள்ளியில்வைத்து அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன் வி.தேவதாசன் அவர்களின் புதல்வர் ஜேம்ஸ் தேவதாசன் மற்றும் குடும்பத்தினர், மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ச.சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் முனைவர் வதிலை பிரதாபன், அ.இளங்கோ,இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன்,இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், புரவலர் சோ.பா.குமரேசன், துணைச் செயலாளர் சுப.மணிமாறன், வீரை.சோ.பாபு,மெகபூப் பாட்சா, ஆ.பாலமுருகன், கு.மாரியப்பன், பெருமாள்
தேவதாசனார் அவர்களின் இறுதி அஞ்சலியில் பல்வேறு தமிழ் அமைப்பு நிர்வாகிகள், மும்பை புறநகர் திமுக, மும்பை நகர தி.மு.கழகத் தோழர்கள் மற்றும் இன்ன பிற கட்சிகளின் பிரமுகர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேவதாசனாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37