05 Jun 2019 12:28 amFeatured


பிவண்டி,பாண்டுப்,ஆரேகாலனி,ஜெரிமெரி உட்பட பல கிளைகள் சார்பில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்
பிவண்டி- திமுக கிளை சார்பில் தாமன்கர் நாக்கா கட்சி அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை புறநகர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.ஜெயினுலாபுதின்,பிவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாஷா சேக், பொருளாளர் முஷ்டாக் அலி, பிவண்டி இளைஞர் அணி அமைப்பாளர் பேராசிரியர் சம்பத், சான் பாஷா, தமிழரசன்,லோகமணி, யோகேஷ் பாபு, நாமக்கல் வரகூர் திமுக கிளை அவைத்தலைவர் பொன்னுசாமி, அங்கூர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஜெரிமெரி கிளை : புறநகர் திமுக துணைச்செயலாளர் அ. இளங்கோ தலைமையில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
பாண்டுப் கிளை : ஜேம்ஸ் தேவதாசன் அவர்கள் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கோரேகாவ் ஆரேகாலனி கிளை சார்பாக unit no.13 பகுதியில் கழக தர்மலிங்கம் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்






Users Today : 5
Total Users : 111227
Views Today : 5
Total views : 439624
Who's Online : 0
Your IP Address : 216.73.216.190