10 Nov 2025 7:28 amFeatured

அலிஷேக் மீரான் சிறப்புரையாற்றுகிறார்
மும்பை புறநகர் மாநில திமுக பிவாண்டி கிளை சார்பில் முப்பெரும் விழா மற்றும் புதிய கிளை நிர்வாகிகள் அறிமுக விழா வருகின்ற 16 11 2025 ஞாயிறு அன்று மாலை சரியாக 6:00 மணி அளவில் பிவாண்டியில் உள்ள சில்கோ ஹவுஸ் கீழ் தளத்தில் வைத்து நடைபெற உள்ளது
சிறப்புரை
மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர் அலிஷேக் மீரான் சிறப்புரையாற்றுகிறார்
பிவாண்டி கிளையின் செயலாளர் எம் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்புக் குழு உறுப்பினர் மெஹபூப் பாஷா சேக் வரவேற்புரை ஆற்ற புறநகர திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பு குழு உறுப்பினர் வதிலை பிரதாபன் துவக்க உரையாற்றுகிறார்
நிகழ்வினை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார் தொகுத்து வழங்குகிறார்
மூவேந்தர்கள் படத்திறப்பு
தந்தை பெரியார் படத்தினை பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயினுலாபுதீன், பேரறிஞர் அண்ணா படத்தினை பீவாண்டி கிளை அவைத் தலைவர் சான் பாஷா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்தை பிவாண்டி கிளை துணைச் செயலாளர் கன்னி முத்து திறந்து வைக்கின்றனர்.
முன்னிலை
புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பி கிருஷ்ணன், அ. இளங்கோ, வே சதானந்தன், எஸ்பி குமரேசன், வீரை சோ பாபு, சா சி தாசன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர், அ. ரவிச்சந்திரன் மற்றும் பிவாண்டி கிளை மேல அமைப்பு பிரதிநிதி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
நலத்திட்ட உதவிகள்
பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் தேவதாசன், சிவக்குமார் சுந்தர்ராஜ், பிவாண்டி கிளை பொருளாளர் எம் எஸ் முஸ்தாக் அலி மற்றும் பிவாண்டி கிளை துணைச் செயலாளர் பேராசிரியர் சம்பத் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்
சிறப்பு அழைப்பாளர்கள்
முகமது அலி, ராமலிங்கம், ஷாகுல் ஹமீது, ஜெயக்குமார், சபீர் ஷேக், ஜாகிர் ஹசன், கோவிந்தன், சபி, ஜெயராம், வி வி பெருமாள், முத்துக்குமார், கு. தர்மலிங்கம், க. ஜிவானந்தம். தானே திமுக ஜாகிர் உசேன், நெல்லை பைந்தமிழ், ஆர் பாலமுருகன், எஸ் பெருமாள், தமிழின நேசன், மா. கதிரவன், நம்பி, முத்தமிழ் தண்டபாணி, ராஜேந்திரன், மூர்த்தி, பழனி, அப்துல் லத்திப், கி வீரமணி, பா. உதயகுமார், பொய்சர் மூர்த்தி, உ அமரன், ரஜகை நிலவன், சி. சுடலையாண்டி, அ. வேலையா, ரமேஷ். அ. அருணாச்சலம், ஜஸ்டின், ஆழ்வார், பொன்மணி, தில்லை, திவா வேல்முருகன், எம். இ. முத்து, குலசேகரன், ஆறுமுகம், மாரி, சங்கர சுப்பு, ஜி. பசுபதிநாதன், டி செல்லத்துரை, பாண்டு, மாடசாமி,ஐயப்பன், சரவணன், பரமசிவம், விஜயகுமார், அம்பர்நாத் ராமு, உதயசூரியன், ரமேஷ் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.







Users Today : 32
Total Users : 119980
Views Today : 35
Total views : 451338
Who's Online : 0
Your IP Address : 216.73.216.156
Prompt message