Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மலாட் பள்ளி மாணவர்களுக்கு நலதிட்ட உதவி

30 Nov 2021 11:47 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

கழக இளைஞரணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் மும்பை மாநில திமுக இளைஞரணி சார்பாக மாநில  அமைப்பாளர் ந.வசந்தகுமார் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கழக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாணவ மாணவியர்களுக்கு இலவச புத்தகப்பை  பேனா மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா மும்பை மாநில திமுக இளைஞரணி சார்பாக மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் 28/11/21 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மலாடு பகுதியில் உள்ள ஒர்லம்-வல்லனை காலனி ஹெர்பன் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் மாநகர திமுக அவைத்தலைவர் திரு வே.ம உத்தமன், புறநகர் திமுக இலக்கியப் அணி புரவலர் சோ. பா .குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாணவ மாணவியருக்கு புத்தகப்பை பேனா மற்றும்  நோட்டு புத்தகங்களை மும்பை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார் அவர்கள் வழங்கினார்கள்.

மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ் நேசன்,   மும்பை புறநகர் திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன்,  பிவண்டி  கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா மலாடு  திமுக நிர்வாகி எஸ் பி செழியன்,  இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகி வி பி ராமையா, மலாடு தமிழர் நல பேரவை தலைவர் எல். பாஸ்கரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.மூர்த்தி  ஆகியோர் வாழ்த்துரை  வழங்கினார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக தானா கிளை திமுக செயலாளர் பாலமுருகன் , டோம்பிவிலி திமுக  செயலாளர் வீரை  சோ பாபு ,தொழிலதிபர் பேலஸ்  துரை ,ஜரிமரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசகம் ,வாசி கிளை திமுக நிர்வாகி தில்லை, ஆறுமுகம், மலாடு பகுதியை சேர்ந்த முத்துராஜ்,கண்ணன் ,முத்தப்பா,செல்வமணி,அப்பு,ராஜேந்திரன்,ஷேக் அசன் சுகன்யா ,பிரேமா சோபா ,பாலையா, சிவா ,ஜாஸ்மின் சாந்தி, முருகன், செல்வி ,டெய்சி கலா, ரஞ்சிதா, ஜெயலட்சுமி, கலையரசி, அலமேலு பாஸ்கரன், முத்துச்செல்வம், ஜி மோகன் ,ஆர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

விழா முடிவில் அறுசுவை உணவு பள்ளி மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104925
Users Today : 0
Total Users : 104925
Views Today :
Total views : 432091
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)