07 Mar 2021 3:13 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக பாண்டுப் கிளைக் கழகம் சார்பாக பேராசிரியர் அன்பழகன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான், அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன், தலைமைக் கழகப் பேச்சாளர் முகமதலி ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ் எஸ் தாசன் தொகுத்து வழங்கினார். மும்பை புறநகர் மாநில துணைச் செயலாளர் அ.இளங்கோ கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஆ.பாலமுருகன், சு.பெருமாள், சேர்மன்துரை, பேலஸ்துரை, ஆசிரியர் குமார செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.






Users Today : 44
Total Users : 120173
Views Today : 64
Total views : 451607
Who's Online : 0
Your IP Address : 216.73.216.173