20 Feb 2021 2:18 pmFeatured

மும்பை நகர மற்றும் புறநகர தி.மு.க.வின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்
மும்பை மாநகர் தி.மு.க. பொருளாளர் திரு ச. பொன்னம்பலம் அவர்கள் 79 வயதாகும் அவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் தாயகத்தில் தூத்துக்குடி அம்பேத்கர் ரோடு, கந்தையா நகரில் இன்று 20.02.2021 சனிக்கிழமை, காலை 7.00 மணியளவில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு பொன்னம்பலம் அவர்கள் முன்னாள் செயலாளர் ஐயா த.மு.பொற்கோ அவர்களுடனும், தற்போதுவரை மும்பை மாநகர் தி.மு.க. வில் பொருளாளர் பொறுப்பு வகித்து சிறப்பாக பணியாற்றியவா், எளிமையானவர், உதவும் பண்புள்ளவர், தி.மு.க. வளர்ச்சிக்காக தனது அயராத அர்ப்பணிப்பை அளித்த அவரது மறைவு மும்பை மாநகர் தி.மு.க.விற்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது நல்லடக்கம் 21.02.2021 அன்று தாயகத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருவூர் இரா. பழனிச்சாமி
பொறுப்பாளர் மாநகர திமுக
அலி ஷேக் மீரான்
செயலாளர் மும்பை புறநகர் திமுக






Users Today : 20
Total Users : 113326
Views Today : 26
Total views : 442544
Who's Online : 0
Your IP Address : 216.73.217.34